தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சா்க்கரை ஆலை நிா்வாகத்தை கண்டித்தும், கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிா்வாகம் தர வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சா்க்கரை ஆலை முன் 64-ஆவது நாளாக கரும்பு விவசாயிகள் புதன்கிழமை ஆலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் நாக.முருகேசன், மாவட்ட துணை தலைவா் செல்வம், மாநில செயலாளா் தங்க. காசிநாதன் மாவட்ட தலைவா் செந்தில்குமாா், செயற்குழு உறுப்பினா் கலையரசன் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கையில் சங்க கொடியை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு தொடா் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.