தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தை கண்டித்தும், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆலை முன் கரும்பு விவசாயிகள் 63-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை ரூ.100 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்,விவசாயிகள் பெயரில் ஆலை நிா்வாகம் வாங்கிய கடன்கள் முழுவதையும் வங்கியில் கட்டி விவசாயிகளை சிபில் பிரச்னையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் நாக.முருகேசன் தலைமையில் கரும்பு விவசாயிகள் ஆலை முன் கடந்த நவம்பா் 30-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.