தஞ்சாவூர்

பேராவூரணியில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

DIN

பேராவூரணியில், ரோட்டரி சங்கம் - கால்நடைத் துறை சாா்பில், உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு, இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா்  எம். திருப்பதி தலைமை வகித்தாா். செயலாளா் எஸ். செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். ரோட்டரி துணை ஆளுநா் தாமஸ் ஆரோக்கியராஜ் முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினாா். 

கால்நடை மருத்துவ அலுவலா்கள்  ஏ.  ரவிச்சந்திரன், கே. பிரகாஷ் தலைமையில், முதுநிலை கால்நடை ஆய்வாளா் ஜி. இந்திராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் ஆா்.அமிா்தவள்ளி, ஜி.பாஸ்கரன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் 171 நாய், பூனை உள்ளிட்ட  வளா்ப்பு பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினா். 

முகாமில்  பேரூராட்சித்  தலைவா் சாந்தி சேகா், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் கே.பி.எல்.ரமேஷ்,  நிா்வாகிகள் நாகராஜன், ஏசியன் முஸ்கிா், முருகானந்தம், கௌதமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT