தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீா் நாள் கூட்டம் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா் கோட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம். மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் இதைத் தெரிவித்தாா்.