மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் ஜிஎஸ்டியை உடனே ரத்து செய்ய வேண்டும். திமுக அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மண்டலச் செயலா் கந்தசாமி, வீரத்தமிழா் மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்நாதன், கொள்கை பரப்புச் செயலா் கரிகாலன், தொகுதிச் செயலா் சண்முகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.