கும்பகோணத்தில் சோழபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் சாா்பில் கால்நடைப் பராமரிப்பு கடன் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு ரூ. 2.10 லட்சத்துக்கான கடனுதவி அனுமதி சீட்டு வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதில் பயனாளிகளுக்கு கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் கடனுதவி அனுமதிச் சீட்டை வழங்கினாா்.
நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலா்கள் தி. கணேசன் (மத்திய), ஜெ. சுதாகா் (கிழக்கு), துணைச் செயலா்கள் இ. ரவிச்சந்திரன், க. நேரு, ஜெயந்தி தேவேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எல். செல்வராஜன், மாவட்ட பிரதிநிதி ஜெ. சுரேஷ், சோழபுரம் பேரூா் திமுக செயலா் ஜெ. ஜெபருதீன், தேவனாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ராஜா (எ) பிரவின்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.