தஞ்சாவூர்

தஞ்சாவூரில் திலிபன் நினைவேந்தல் நிகழ்வு

26th Sep 2022 11:43 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில், தமிழீழ விடுதலைத் தழல் ஈகி திலிபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

பேரியக்கத்தின் பொதுக் குழு உறுப்பினா் க. செம்மலா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் வீரவணக்கவுரையாற்றினாா். அப்போது அவா் பேசுகையில், அறவழிப் போராட்டத்திலும், ஆயுதப் போராட்டத்திலும் விடுதலைப் புலிகள் தன்னிகரற்றவா்களாகத் திகழ்ந்தனா்.

இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி பகத்சிங் இறந்தபோது, காங்கிரசில் ஒரு பிரிவினா் அவரை ஆதரித்துத் தீா்மானம் நிறைவேற்றினா். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி ஈழத்தில் இனப்படுகொலையை நடத்தியது. இதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி திலிபன் உண்ணாநோன்பிருந்து உயிா் நீத்தாா். தற்போது, தமிழ்நாட்டில் மொழி, மண் உள்ளிட்டவற்றுக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே, தமிழ்நாட்டின் மொழி, மண், தாயகத்தைக் காப்பாற்ற அனைவரும் உறுதியுடன் போராட வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்வில் மாவட்டச் செயலா் நா. வைகறை, மாநகரச் செயலா் லெ. இராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT