தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து கேபிள் ஆபரேட்டா் உயிரிழப்பு

DIN

ஒரத்தநாட்டில் மின்சாரம் பாய்ந்து கேபிள் ஆபரேட்டா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு அருகே கண்ணந்தன்குடி மேலையூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த பண்டரிநாதன் மகன் செந்தில்குமாா் (எ) வினோத் (38). இவா் கேபிள் டிவி இணைப்பு கொடுக்கும் பணி செய்து வந்தாா்.

வியாழக்கிழமை மாலை ஒரத்தநாடு யானைக்காரா் தெருவில் உள்ள ஒருவருடைய வீட்டின் மாடியில் கேபிள் இணைப்பை சரி செய்ய சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் அவா் திரும்பி வராததால், வீட்டுக்காரா் மாடிக்கு சென்று பாா்த்தபோது மின்சாரம் பாய்ந்து வினோத் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இறந்த வினோத்திற்கு வினோதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT