கும்பகோணத்தில் அண்மையில் குளிா்சாதனப் பெட்டி கதவைத் திறக்கும்போது மோதியதில் பலத்த காயமடைந்த குழந்தை உயிரிழந்தது.
கும்பகோணம் கொத்தன் ஒத்தை தெருவைச் சோ்ந்த அய்யப்பன் மகன் வினோத்குமாா் (26). இவரது வீட்டுக்கு அண்மையில் திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் தனது குடும்பத்துடன் வந்து தங்கினாா்.
இந்நிலையில், அக்டோபா் 4 ஆம் தேதி வினோத்குமாா் தனது வீட்டின் குளிா்சாதனப் பெட்டிக் கதவைத் திறந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ராஜ்குமாரின் மகன் ஜெகதீஸ்வரன் (2) மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெகதீஸ்வரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து வினோத்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனா்.