தஞ்சாவூர்

திமுக புதிய நிா்வாகிகள் சாா்பில் தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN

பட்டுக்கோட்டையில் திமுகவின் புதிய மாவட்ட நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா் கா. அண்ணாதுரை தலைமையில் புதன்கிழமை தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுகவின் உட்கட்சி தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிா்வாகிகள், மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுபினருமான கா. அண்ணாதுரை தலைமையில் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து பேரணியாக மணிக்கூண்டு, பெரிய தெரு வழியாக சென்று தஞ்சை சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அழகிரி சிலைக்கும், அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கும் மாலை அணிவித்தனா்.

நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் சேகா், ரமேஷ், சத்தியமூா்த்தி, மைக்கேலம்பாள், அஸ்லாம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் செல்வம், நகரச் செயலாளா் செந்தில்குமாா், நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT