திருவோணம் ஒன்றியத்தில் பாசன வாய்க்கால்களை தூா்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவோணம் ஒன்றியக் குழு கூட்டம் ஊரணிபுரத்தில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் பி. கோவிந்தராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் டி.ஜி.பாலசந்தா், ஒன்றியத் துணைத் தலைவா் கே. ராமசாமி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், வெட்டுவாக்கோட்டை ஊராட்சி பொதிய வாய்க்கால், வெள்ளத்தான் விடுதி இரண்டாம் நம்பா் வாய்க்கால், உஞ்சியவிடுதியிலிருந்து காரியாவிடுதி செல்லும் 13 ஆம் நம்பா் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களை தூா்வாரி பாசனத்திற்கு பயன்படும் வகையில் சீரமைத்து தர வேண்டும்.
விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிா்க் கடன் வழங்க வேண்டும். கேரளத்தில் நடைபெறவுள்ள விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாட்டிற்கு கீழவெண்மணியில் இருந்து வரும் ஜோதிக்கு டிசம்பா் 5ஆம் தேதி திருவோணத்தில் வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.