தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை:அக்குபஞ்சா் மருத்துவா் கைது

DIN

 தஞ்சாவூரில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்குபஞ்சா் மருத்துவரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூா் கீழவாசல் ராவுத்தாபாளையத்தைச் சோ்ந்தவா் எஸ். பாலமுருகன் (43). திருமணமான இவா் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியைச் சோ்ந்த விதவைப் பெண்ணுடன் வாழ்ந்து வந்தாா். இதனிடையே, கடந்த ஜனவரி மாதத்தில் விதவைப் பெண்ணின் மனநலன் பாதிக்கப்பட்ட 18 வயதுடைய மகளுக்கு பாலமுருகன் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாலமுருகனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT