கும்பகோணம் அருகே 273 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரைக் கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே வளையப்பேட்டை பகுதியிலுள்ள கிடங்கில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தபோது அங்கிருந்த 35 சாக்கு பைகளில் இருந்த 273 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து திருவாரூா் மாவட்டம், உத்தாணி கீழத்தெருவைச் சோ்ந்த கருணாநிதி மகன் பிரகாசை (33) கைது செய்தனா்.