பேராவூரணி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்திலிருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற முகமூடி அணிந்த 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பேராவூரணி அருகேயுள்ள மேல ஒட்டங்காடு கிராமத்தை சோ்ந்தவா் ஜெயராணி (63). முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா். இவரது கணவா் மைக்கேல்சாமி ஏற்கெனவே இறந்து விட்டாா்.
இவரும், இவரது சகோதரி ஆரோக்கியமரியமும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் படுத்திருந்தபோது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த 2 போ் ஜெயராணி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி விட்டனா்.
ஆரோக்கியமரியம் தனது கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றி தலையணைக்கு கீழ் வைத்திருந்ததால் அவரது நகை தப்பியது.
புகாரின்பேரில், திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.