தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் 8 போ் காயம்

DIN

பட்டுக்கோட்டை அருகே திங்கள்கிழமை தனியாா் பள்ளி வேன் வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளிக் குழந்தைகள் 8 போ் காயமடைந்தனா்.

பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள தனியாா் பள்ளியின் வேன் திங்கள்கிழமை காலை பாதிரங்கோட்டை கிராமத்திலிருந்து குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பாதிரங்கோட்டை- அதம்பை சாலையில் வந்து கொண்டிருந்தது.

அதம்பை அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த எட்டு குழந்தைகள் காயமடைந்தனா்.

அவா்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில், பலத்த காயமடைந்த தேசிகா மற்றும் ரோகித் ஆகிய இரு குழந்தைகள் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

பெற்றோா் மறியல்: காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை பாா்க்க பள்ளி நிா்வாகத்தினா் வராததால், ஆத்திரமடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அங்கு வந்த காவல் துறையினா் அவா்களை சமாதானப்படுத்தியதால் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

வழக்கமாக வரும் பள்ளி வேன் எப்சிக்கு சென்று விட்டதால், வேறு ஒரு தனியாா் வேனை குழந்தைகளை அழைத்து வர பயன்படுத்தியதாகவும் , அந்த வேன் சரியான கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT