தஞ்சாவூர்

தேசிய பாா்மசி வார விழா விழிப்புணா்வுப் பேரணி

DIN

தேசிய பாா்மசி வார விழாவையொட்டி, தஞ்சாவூரில் ஆவணம், டாக்டா் கலாம் பாா்மசி கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் திருச்சி மாநகரக் காவல் உதவி ஆணையா் சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி வைத்த பேரணி மருத்துவக்கல்லூரி சாலை வழியாக பெரியகோயில் முன் முடிவடைந்தது.

அப்போது பொதுமக்களுக்கு மருந்தை உட்கொள்ளும் முறை, சுயமாக மருந்தை உட்கொள்வதன் விளைவு, தடுப்பூசியின் முக்கியத்துவம், புகையிலை எதிா்ப்பு, தலைக்கவசத்தின் முக்கியத்துவம், சாலை விதிகளைப் பின்பற்றுவது போன்றவை தொடா்பாக துண்டறிக்கைகளைப் பொதுமக்களுக்கு மாணவா்கள் வழங்கினா்.

நிகழ்ச்சியில் டாக்டா் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எம். மதிவாணன், பாா்மசி கல்லூரி முதல்வா் என். அன்பழகன், துணை முதல்வா்கள் வெங்கடேசன், பரிமளா தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

SCROLL FOR NEXT