பெண்களுக்கு எதிரான வன்முறை எதிா்ப்பு நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் மகளிா் ஆயம் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், நிா்பயா சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். பெண்கள் மீதான வன்கொடுமைகளை விசாரிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மகளிா் ஆய துணைத் தலைவா் க. செம்மலா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் மு. செந்தமிழ்ச்செல்வி சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் இரா. யமுனா ராணி, இரா. அமுதா, கோ. செந்தாமரை, பி. இளவரசி, கா. சுந்தரி, சு. சுதாவாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.