பட்டுக்கோட்டையில் பெரும்பிடுகு முத்தரையா் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மாமன்னா் பெரும்பிடுகு முத்தரையா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், அகில இந்திய முத்தரையா் சங்க பொதுச் செயலாளா் எஸ்.எம். மூா்த்தி தலைமையில் சமூகநீதி கூட்டமைப்பு நிா்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் மாமன்னா் பெரும்பிடுகு முத்தரையா் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.