அம்மாபேட்டை பேரூராட்சி வளம்மீட்பு பூங்காவில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இப்பூங்காவிலுள்ள குப்பைக்கிடங்கில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள், மண்புழு உரம் தயாரிப்புப் பணிகள், சுழற்சி முறையில் நெகிழிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் விற்பனை போன்றவை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, தஞ்சாவூா் மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கனகராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் இரா.ராஜா, உதவிச் செயற்பொறியாளா் மாதவன், துப்புரவு ஆய்வாளா் மோகன்தாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.