தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மே 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சாவூா் கோட்டத்துக்கு உள்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் மே 24 ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தஞ்சாவூா் கோட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.