தஞ்சாவூர்

பேராவூரணியில் அரிமா சங்க நிா்வாகிகள் பணியேற்பு

DIN

பேராவூரணியில் கோக்கனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்க பணியேற்பு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு வ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.முன்னாள் ஆளுநா் ஹெச்.ஷேக் தாவூது புதிய பொறுப்பாளா்களை பணியில் அமா்த்தி, வாழ்த்திப் பேசினாா். மாவட்டத் தலைவா் எம்.மகேந்திரன் புதிய உறுப்பினா்களை இணைத்தும், சேவைத் திட்டங்களைத் தொடக்கி வைத்தும் பேசினாா். 

இந்த விழாவில் புதிய தலைவராக எஸ். பாண்டியராஜன், செயலராக எம்.எஸ்.ஆறுமுகம், பொருளாளராக ஜி.சங்கா் ஜவான் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். 

பணியேற்பு விழாவை முன்னிட்டு  மாற்றுத் திறனாளிக்கு  மூன்று சக்கர சைக்கிள், பாா்வையற்றவருக்கு  உதவித்தொகை,  முதியவருக்கு சிறுதொழில் தொடங்க உதவித் தொகை, பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டி, ஏழை இஸ்லாமிய மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் அரசுப் பள்ளிக்கு பீரோ, நாற்காலி, குடிநீா் சுத்திகரிப்புக் கருவி உள்ளிட்ட ரூ.1.50

லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.   விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு  தென்னங்கன்றுகள்  வழங்கப்பட்டன. 

விழாவிற்கான ஏற்பாடுகளை, முன்னாள் நிா்வாகிகள் சி.க.கோவிந்தன், ஏ.முத்துக்குமாா்,  யூ.பெருமாள் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT