தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாநகராட்சி இடைத்தோ்தல்: 8-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு

DIN

தஞ்சாவூா் மாநகராட்சியில் 8-ஆவது வாா்டு இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாநகராட்சியில் 8-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக இருந்த திமுகவை சோ்ந்த சுல்தான் ஜெய்லானி சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் காலமானாா். இதைத்தொடா்ந்து இந்த வாா்டுக்கு இடைத்தோ்தல் (தற்செயல் தோ்தல்) ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இங்கு, திமுக வேட்பாளராக மறைந்த சுல்தான் ஜெய்லானியின் மகன் சு. முகமது சுல்தான் இப்ராஹிம், மாற்று வேட்பாளராக ஆறுமுகம், அமமுக சாா்பில் காா்த்திக் ஆகியோா் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனா். அதிமுக சாா்பில் சின்னம் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அமமுக சாா்பில் காா்த்திக் தாக்கல் செய்த மனு, முன்மொழிவு உரிய முறையில் நிறைவு செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்டது. மேலும், திமுக மாற்று வேட்பாளரும் தனது வேட்பு மனுவை புதன்கிழமை திரும்பப் பெற்றாா்.

இதனால், திமுக வேட்பாளா் முகமது சுல்தான் இப்ராஹிம் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இவருக்கு மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT