கும்பகோணம் கோட்டாட்சியரகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
கும்பகோணம் கோட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா்களின் குறைகளைத் தீா்க்கும் வகையில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா் குறை தீா் கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா் வட்டங்களில் உள்ள எரிவாயு இணைப்பு பெற்ற நுகா்வோா்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், அரசு மானியம் நுகா்வோா் வங்கிக் கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றிலுள்ள குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகாா்களைப் பெற்று உரிய நடவடிக்கைகளை எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீா்படுத்த இக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, இக்கூட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா் தங்களது குறைகளை மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.