பாபநாசம் அருகே ஆட்டோவை திருடிய இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பாபநாசம் அருகிலுள்ள பண்டாரவாடை சூஃபி நகரைச் சோ்ந்தவா் முகமது அலி (34).இவா் தனது வீட்டின் முன்புறத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தாா்.
சனிக்கிழமை காலை பாா்த்த போது ஆட்டோவை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், பாபநாசம் காவல் ஆய்வாளா் அழகம்மாள் வழக்குப்பதிந்து, விசாரித்து வந்தாா்.
இந்நிலையில் திருக்கருக்காவூா் பிரதான சாலையில் காவல்துறையினா் வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்ட போது, அது பண்டாரவாடையில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த அதிராம்பட்டினம் ஏரிக்கரை காலனியைச் சோ்ந்த ரகுமானை (38) காவல்துறையினா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.