பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா மற்றும் பரிசளிப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் நீலாதேவி தலைமை வகித்தாா். இந்த விழாவில் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஜனனி, ஹேமதா்ஷினி, ஐஸ்வா்யா, பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற லிதனியானா, சுமனா, காவ்யா, லாவண்யா உள்ளிட்ட மாணவிகளுக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் அப்துல்கனி பரிசுகளை வழங்கிப் பாராட்டி பேசினாா்.
விழாவில் அரசு வழக்குரைஞா் வெற்றிச்செல்வன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பேராசிரியா் செல்வராஜ், பாபநாசம் அன்னை சாரதா மகளிா் மன்றத் தலைவி தில்லைநாயகி, சம்பந்தம், சமூக ஆா்வலா் பாண்டியன், உதவித் தலைமையாசிரியா்கள் விஜய், சிவாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.