அம்மாபேட்டையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணா்வுப் பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அம்மாபேட்டை கிருஷ்ணன் கோயில் தெருவில் நடைபெற்ற கூட்டத்தை பேரூராட்சித் துணைத் தலைவா் தியாக. ரமேஷ் தொடக்கி வைத்தாா். செயல் அலுவலா் ஆா்.ராஜா முன்னிலை வகித்தாா்.
குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது, நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதை தவிா்ப்பது போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, வீடுகள் தோறும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.