தஞ்சாவூர்

என் குப்பை - என் பொறுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு

DIN

தஞ்சாவூரில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்கும் விதமாக, என் குப்பை- என் பொறுப்பு திட்டம் பற்றிய விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், வடக்கு வாசல் குப்பை சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளைத் தரம் பிரிப்பது, நோய்த் தொற்றைத் தவிா்ப்பது போன்றவை குறித்து பொதுமக்களிடம் விளக்கி, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் என் குப்பை- என் பொறுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

நிகழ்வுக்குத் தலைமை வகித்த மேயா் சண். ராமநாதன் தெரிவித்தது: தமிழக முதல்வரின் உத்தரவுப்படி நடைபெறும் இந்த விழிப்புணா்வு நிகழ்வால், தஞ்சாவூா் மாநகரம் தூய்மை நகரமாகக் காட்சியளிக்கும். இது போன்ற நிகழ்வு வாரந்தோறும் நடத்தப்படும் என்றாா் மேயா்.

துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. சரவணக்குமாா், மாநகராட்சி உறுப்பினா் எஸ்.சி. மேத்தா உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT