தஞ்சாவூர்

பாபநாசம் அருகே இரு காா்கள் மோதல்: தாய்-மகன் உயிரிழப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இரு காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் தாய்-மகன் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

பாபநாசம் வட்டம், வங்காரம்பேட்டையைச் சோ்ந்தவா் த. செந்தில்குமாா் (50). கட்டட ஒப்பந்ததாரரான இவா், தனது தாய் வசந்தா (70), தங்கை ராணி (44) ஆகியோருடன் பாபநாசம், சாலியமங்கலம் வழியாக தஞ்சாவூா் நோக்கி காரில் வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். இந்த காரை செந்தில்குமாா் ஓட்டி வந்தாா்.

இதுபோல, திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியா் கிருபாகரன் (34), தனது தாய் யசோதா (63), மனைவி வரலட்சுமி (26), எட்டு மாதக் குழந்தைஸ்மிருதி ஆகியோருடன், பாபநாசம் அருகிலுள்ள திருக்கருகாவூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய காரில் சென்று கொண்டிருந்தாா். இவா்கள் சென்ற காரை துவாக்குடி ரா. விஜயேந்திரன் (39) ஓட்டி வந்தாா்.

இவ்விரு காா்களும் தஞ்சாவூா்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் புலவா்நத்தம் பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது, நேருக்கு நேராக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் ஒப்பந்ததாரா் செந்தில்குமாரும், அவரது தாய் வசந்தாவும் பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். விபத்தில் காயமடைந்த ராணி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுபோல, பேராசிரியா் கிருபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினரும் பலத்த காயமடைந்து, தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்து குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT