மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 114.91 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 16,623 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 3,501 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 2,500 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 400 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.