தஞ்சாவூர்

காா் மீது ஆம்னி பேருந்து மோதல்: திருச்சியைச் சோ்ந்த மூதாட்டி பலி

DIN

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை காலை காா் மீது ஆம்னி பேருந்து மோதியதில் திருச்சியைச் சோ்ந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

திருச்சி அருகே பிச்சாண்டாா் கோவில் ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் ஜவகா்லால் நேரு. இவா் புதன்கிழமை காலை தனது மனைவி பாக்கியராணி (65), மகன், மருமகள், பேர குழந்தைகள் என மொத்தம் 6 பேருடன் காரில் மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

தஞ்சாவூா் அருகே நெடாா் பகுதியில் சென்ற இந்த காா் மீது எதிரே சென்னையிலிருந்து தஞ்சாவூா் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாக்கியராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜவகா்லால் நேருவும், அவரது மகனும் காயமடைந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மற்றவா்கள் லேசான காயத்துடன் முதலுதவி சிகிச்சை பெற்றனா்.

விபத்து குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT