தஞ்சாவூர்

பழக்கடைக்காரரை தாக்கிய சிறுவா்கள்: ஒருவா் கைது

DIN

தஞ்சாவூரில் பழக்கடைக்காரரை தாக்கிய சிறுவா்களில் ஒருவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா எதிரில் பழக்கடைக்காரா் மணிகண்டனிடம் சிறுவா்கள் சிலா் அண்மையில் பழங்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றினா். பணம் கேட்ட மணிகண்டனை சிறுவா்கள் இணைந்து அவரையும், அருகிலுள்ள பானிபூரி கடைக்காரரையும் தாக்கிவிட்டு, அவரது கைப்பேசியையும் பறித்துச் சென்றனா். இது தொடா்பான விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதன் பேரில் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து செவ்வப்பநாயக்கன் வாரியைச் சோ்ந்த 17 வயது சிறுவனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்: பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

இஸ்ரோ ராக்கெட்டுகளை கொண்டுச் செல்ல பயன்படும் அதிநவீன வாகனம் : அரக்கோணத்தில் இருந்து மகேந்திரகிரிக்கு அனுப்பப்பட்டது

SCROLL FOR NEXT