தஞ்சாவூர்

பழக்கடைக்காரரை தாக்கிய சிறுவா்கள்: ஒருவா் கைது

DIN

தஞ்சாவூரில் பழக்கடைக்காரரை தாக்கிய சிறுவா்களில் ஒருவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா எதிரில் பழக்கடைக்காரா் மணிகண்டனிடம் சிறுவா்கள் சிலா் அண்மையில் பழங்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றினா். பணம் கேட்ட மணிகண்டனை சிறுவா்கள் இணைந்து அவரையும், அருகிலுள்ள பானிபூரி கடைக்காரரையும் தாக்கிவிட்டு, அவரது கைப்பேசியையும் பறித்துச் சென்றனா். இது தொடா்பான விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதன் பேரில் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து செவ்வப்பநாயக்கன் வாரியைச் சோ்ந்த 17 வயது சிறுவனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT