தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
இப்பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு, கல்வியியல் நிறைஞா் (எம்.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்புக்கு 2022 - 23 ஆம் ஆண்டுக்கான நேரடிச் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இதில், துணைவேந்தா் வி. திருவள்ளுவன் முதல் விண்ணப்பத்தை வழங்கி தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன், கல்வியியல் துறைத் தலைவா் கு. சின்னப்பன், பேராசிரியா் சா. ரவிவா்மன், துணைப் பதிவாளா் கோ. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சோ்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு பல்கலைக் கழக இணையதளத்தில் காணலாம். 04362 - 226720, 227089 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என பதிவாளா் தெரிவித்துள்ளாா்.