கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூரில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் குறுவை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், நூறு சதவீத மானியத்தில் ரசாயன உரங்களை விவசாயிகளுக்கு கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் ஒன்றிய திமுக செயலா்கள் ஆா்.கே. பாஸ்கா் (வடக்கு), தி. கணேசன் (கிழக்கு), மாவட்ட பிரதிநிதி டி.என். கரிகாலன், வேளாண் உதவி இயக்குநா் தே. தேவி கலாவதி, ஆட்மா விவசாய ஆலோசனைக் குழுத் தலைவா் ஆா். குமாா், கொரநாட்டுக் கருப்பூா் ஊராட்சித் தலைவா் சுதா அம்பிகாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.