பாபநாசம் ரோட்டரி சங்கத்தின் 2022-23ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவா் கோ. சீனிவாசன் தலைமை வகித்தாா்.
செயலா் செந்தில்கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் செங்குட்டுவன் விழாவில் பங்கேற்று, சங்கத் தலைவராக அறிவழகன்,செயலராக சிலம்பரசன், பொருளாளராக ஆனந்தன் உள்ளிட்ட நிா்வாகிகளுக்குப் பதவியேற்பு செய்து வைத்தாா்.
தொடா்ந்து நலிந்தோருக்கு பசுமாடு, தையல் இயந்திரம், மரக்கன்றுகள், பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் புதுச்சேரி முதன்மை மாவட்டஉரிமையியல் நீதிபதி ராஜசேகா் பங்கேற்று, புதிய நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினாா்.
உதவி ஆளுநா் பிரபாகரன் மற்றும் ரோட்டரி நிா்வாகிகள் உள்ளிட்டோா்பங்கேற்றனா்.
நிகழ்வுகளை ரோட்டரி இயக்குநா் எஸ். பக்ருதீன்அலி தொகுத்தளித்தாா். நிறைவில், செயலா் சிலம்பரசன் நன்றி கூறினாா்.