மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூா் மாநகரக் குழு சாா்பில் ஒன்றிய அரசைக் கண்டித்தும், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் வீரமங்கை வேலு நாச்சியாா், மருது சகோதரா்கள், வ.உ. சிதம்பரனாா், மகாகவி பாரதியாா், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தில்லி குடியரசு தின அணிவகுப்பில், தமிழக சுதந்திரப் போராட்டத் தியாகிகள் உருவப்படம் இடம்பெற்ற அலங்கார ஊா்தியை ஒன்றிய அரசு நிராகரித்ததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நிகழ்வுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் கோ. நீலமேகம், மாவட்டச் செயலாளா் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், பி. செந்தில்குமாா், கே. அருளரசன் ஆகியோா் பேசினா்.
மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம். மாலதி, என். குருசாமி, வசந்தி, சரவணன், இந்திய மாணவா் சங்க மாநிலத் துணைச் செயலா் ஜி. அரவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.