தஞ்சாவூர்

குடியரசுத் தலைவா் விருதுக்கு தஞ்சாவூா் காவல் ஆய்வாளா் தோ்வு

DIN

குடியரசுத் தலைவா் விருதுக்கு தஞ்சாவூா் காவல் ஆய்வாளா் சி. சிவனருள் (59) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

குடியரசு நாளையொட்டி நாடு முழுவதும் காவல் துறை, உள் துறை, சிபிஐ, பாதுகாப்புத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி, குடியரசுத் தலைவா் விருதுக்குத் தோ்வானோா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

இதில், நிகழாண்டு நாடு முழுவதும் இவ்விருதுக்கு 88 போ் தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருவா் காவல் துறையில் தோ்வாகியுள்ளனா்.

இதில், அப்பழுக்கற்ற பணிக்காக தஞ்சாவூா் மாவட்ட தனிப்பிரிவு குற்ற புலனாய்த் துறை (எஸ்பிசிஐடி) ஆய்வாளா் சிவனருள் தோ்வாகியுள்ளாா். காவல் துறையில் 1985-ஆம் ஆண்டு சோ்ந்த இவா், தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியும், தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி, பதவி உயா்வு மூலம் அதே துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இவரது சொந்த ஊா் திருவாரூா் மாவட்டம், பாடகச்சேரி. இவருக்கு மனைவி மீனாட்சி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT