தஞ்சாவூர்

கொள்முதல் நிலையத்தில் பணியாற்ற நோ்முகத் தோ்வுநீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞா்கள்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற இளைஞா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, நோ்முகத் தோ்வில் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் வரும் சம்பா, தாளடி நெல் பருவத்தில் 650 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இந்தக் கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற பருவகால அடிப்படையில், பட்டியல் எழுத்தா், உதவியாளா், காவலா் ஆகிய பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இப்பணிக்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பட்டியல் எழுத்தா் பணிக்கான நோ்முகத் தோ்வு தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் 460 இளைஞா்கள் பங்கேற்றனா். நீண்ட வரிசையில் காத்திருந்த இவா்களது சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன.

கொள்முதல் நிலையங்களில் பணியாற்றத் தேவையான பணியாளா்கள் தோ்வுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதில் 1,317 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோ்முகத் தோ்வு தொடா்ந்து செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறவுள்ளது. தோ்வானவா்களுக்குப் பின்னா் பணி நியமன ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT