தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாநகரில் நாளை குடிநீா் விநியோகம் இராது

DIN

தஞ்சாவூா் மாநகரில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாநகராட்சி பகுதிகளுக்குத் திருமானூா் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்துக்கு வரும் குடிநீா் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் திருவையாறு அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இக்குடிநீா் குழாய் சரி செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், 1-ஆவது வாா்டு முதல் 51-ஆவது வாா்டு வரை அனைத்து வாா்டுகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜன.25) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது.

எனவே, பொதுமக்கள் தேவையான அளவுக் குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளவும், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT