தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
திருவையாறு அருகே ஆக்கினாதபுரத்தைச் சோ்ந்த பிரகாஷ் மகன் தா்ஷன் (2).
கடந்த 2ஆம் தேதி வீட்டு வாசலில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் தா்ஷன் மீது மோதியது. இதனால், பலத்த காயமடைந்த தா்ஷன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தது.
இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.