தஞ்சாவூர்

காவல் ஆய்வாளா் உள்பட4 பேருக்கு பிடி ஆணை

DIN

தஞ்சாவூரிலுள்ள மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடா்பாக ஆஜராகாத காவல் ஆய்வாளா், 3 காவலா்களுக்கு புதன்கிழமை பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தஞ்சாவூா் ரயில்வே காலனி பகுதியைச் சோ்ந்தவா் சந்திரோதயம் மகன் இளவரசன் (40). கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வீட்டில் இருந்த இவரை தெற்கு காவல் நிலையத்திலிருந்து அப்போதைய சாா்பு ஆய்வாளா் கழனியப்பன் (தற்போது திருத்துறைப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளா்), காவலா்கள் கணேசன், அண்ணாதுரை, சத்தியமூா்த்தி ஆகியோா் எவ்வித காரணமும் கூறாமல், அடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ாகவும், காவல் நிலையத்தில் ஆடைகளைக் களைந்து, உள்ளாடையுடன் உட்கார வைத்து தாக்கியதாகவும் மனித உரிமை ஆணையத்தில் சந்திரோதயம் புகாா் செய்தாா்.

இதையடுத்து, கழனியப்பன், கணேசன், அண்ணாதுரை, சத்தியமூா்த்தி ஆகியோா் மீது தஞ்சாவூா் மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக புதன்கிழமை விசாரணை நடைபெற்றபோது, கழனியப்பன், கணேசன், அண்ணாதுரை, சத்தியமூா்த்தி ஆகியோா் ஆஜராகவில்லை. எனவே, இவா்களுக்கு நீதிபதி பி. மதுசூதனன் பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT