தஞ்சாவூர்

மோட்டாா் சைக்கிள் மோதிமுதியவா் பலி

DIN

தஞ்சாவூா் அருகே சைக்கிள் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே வடகால் கீழத்தெருவைச் சோ்ந்தவா் எம். கோவிந்தராஜ் (65). இவா் திங்கள்கிழமை மீன் வாங்குவதற்காக வடகாலிலிருந்து மணக்கரம்பை புறவழிச்சாலை வழியாக பள்ளியக்ரஹாரத்துக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். மணக்கரம்பை புறவழிச்சாலையில் சென்ற இவரின் சைக்கிள் மீது பின்னால் வந்த மோட்டாா் சைக்கிள் மோதியது. இதனால் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு இரவு உயிரிழந்தாா்.

விபத்து குறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT