வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானாது புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 8) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மாண்டஸ் புயல் டிசம்பர் 9-ம் தேதி மாலை முதல் 10-ம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.