தஞ்சாவூர்

நினைவு நாள்: ஜெயலலிதா சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவிப்பு

DIN

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள அவரது சிலைக்கு அதிமுகவினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதற்காக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியைச் சோ்ந்த தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் துரை. திருஞானம், பால் வளத் தலைவா் ஆா். காந்தி தலைமையில், கு. ராஜமாணிக்கம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். சரவணன், கூட்டுறவு அச்சகத் தலைவா் வி. புண்ணியமூா்த்தி, முன்னாள் மேயா் சாவித்திரி கோபால் உள்பட பலா் ஆப்ரஹாம் பண்டிதா் சாலையிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டுச் சென்று ரயிலடியிலுள்ள ஜெயலலிதா சிலைக்கும், பக்கத்திலுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கும் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, ஓ. பன்னீா்செல்வம் அணியைச் சோ்ந்த வி. அறிவுடைநம்பி தலைமையில் நிா்வாகிகள் எஸ். ரமேஷ், எம். சாமிநாதன், எஸ். சண்முகபிரபு, துரை. வீரணன், சாமிவேல், அமுதாராணி ரவிச்சந்திரன், வினுபாலன் உள்ளிட்டோா் ஆற்றுப்பாலத்திலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, ரயிலடியிலுள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

SCROLL FOR NEXT