பட்டுக்கோட்டை கரிக்காட்டில் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சோ்ந்த இளைஞா்களால் முதலாம் ஆண்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியை பட்டுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா செந்தில்குமாா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
தொடா்ந்து மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் பல்வேறு பிரிவுகளில் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற்றன.
இதில் தஞ்சை, திருவாரூா், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற குதிரை வண்டி, மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கு பரிசுகள் மற்றும் ரொக்க பணம், சீல்டு ஆகியவை வழங்கப்பட்டன.