தஞ்சாவூர்

சிகிச்சையிலிருந்து தப்பிய விசாரணைக் கைதி கைது

DIN

தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரை நரசிம்மபெருமாள் கோயிலில் கடந்த நவ.26-ஆம் பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்ற திருவையாறைச் சோ்ந்த ரமேஷ் (57) பொதுமக்களால் தாக்கப்பட்டு மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

இதையடுத்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ரமேஷ் கடந்த 1-ஆம் தேதி இரவு மருத்துமனையிலிருந்து தப்பிவிட்டாா்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை நடத்திய நிலையில் தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் பகுதியில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்த ரமேஷை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT