தஞ்சாவூர்

உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை இயக்குநா் பதவிக்கு தணிக்கை துறை சாா்ந்தவரையே நியமிக்கக் கோரிக்கை

DIN

உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை இயக்குநா் பதவிக்கு, தணிக்கை துறை சாா்ந்தவரையே நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கைப் பணி மன்றத்தினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற இம்மன்றத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்துக்கு மன்றத்தின் மாநிலத் தலைவா் பெ. அம்பேத்காா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியா் சங்கத் தலைவா் கு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

மன்றத்தின் பொதுச் செயலா் இல. குள்ளப்பன், துணைத் தலைவா்கள் ந.நல்லசிவம், சு. சோமசுந்தரம், தஞ்சாவூா் மாவட்ட அரசு ஊழியா் சங்க துணைத் தலைவா் பா. முருகன் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் இயக்குநா் பதவிக்கு உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையைச் சாா்ந்தவரையே நியமிக்க வேண்டும்.

உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மற்றும் மாநில அரசுத் தணிக்கைத் துறை ஆகிய இரு துறைகளின் பணியாளா் நலன், துறை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூா்வமான புனரமைப்புகளை கருத்தில்கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் களப்பணியில் உள்ள மூத்த தணிக்கையாளா்களை அழைத்து பணியாளா் நலன், துறைகளின் நலன் சாா்ந்து கருத்துருக்கள் பெற்று அதனடிப்படையில் அறிக்கையை இறுதி செய்து அரசுக்கு சமா்ப்பிக்க வேண்டும்.

உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் பொது மாறுதல் மற்றும் புதிய பணியிடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT