பேராவூரணியில் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணியின் பிறந்த நாளையொட்டி, பெரியாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் சந்திரமோகன் தலைமை வகித்தாா்.
அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவா் ப. மகராஜா, பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவா் பாலசுப்பிரமணியன், பேராவூரணி ஒன்றிய இளைஞரணி தலைவா் கவுதமன் ஆகியோா் முன்னிலையில் பேராவூரணி ஒன்றிய தலைவா் மு. தமிழ்செல்வன் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.