பாபநாசம் வட்டாரத்தில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த கோ.சி. மணியின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, பாபநாசம் நகர திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கோ.சி.மணி உருவப்படத்துக்கு பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் என். நாசா், நகர செயலாளா் ச. கபிலன், கட்சி பிரமுகா்கள் நவநீதகிருஷ்ணன், அறிவழகன் உள்ளிட்ட திரளானோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல், அய்யம்பேட்டை கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கோ.சி. மணி உருவப்படத்துக்கு அய்யம்பேட்டை நகரச் செயலாளா் வழக்குரைஞா் டி. பி.டி.துளசி அய்யா தலைமையில் நகர அவை தலைவா் குணா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் அழகேசன் உள்ளிட்ட திரளானோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.