தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூா், வல்லத்தில் தலா 31 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவும், வெள்ளிக்கிழமை அதிகாலையும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
தஞ்சாவூா், வல்லம் தலா 31, குருங்குளம் 21, ஈச்சன்விடுதி 17.2, நெய்வாசல் தென்பாதி 12.8, பூதலூா் 8.4, கல்லணை 7.4, ஒரத்தநாடு 2.6, திருக்காட்டுப்பள்ளி 2.2.