தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பெட்ரோல் ஊற்றி தாயை எரித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி தையல்நாயகி (40). இவருக்கு இரண்டு மகள், கந்தவேல் (23) என்ற மகன் உள்ளனா். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கின்றனா்.
இந்நிலையில், தையல்நாயகிக்கும் அவரது உறவினா் ஒருவருக்கும் முறையற்ற தொடா்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கந்தவேல் பலமுறை தாயை கண்டித்தாராம். இதுதொடா்பாக தாய்க்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்தப் பிரச்னை தொடா்பாக கோபத்தில் இருந்த கந்தவேல், வியாழக்கிழமை தந்தை வேலைக்கு சென்ற பின்னா், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டாராம். அவரின் அலறல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, தாயின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்ததாக கூறி கந்தவேல் வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து கந்தவேலை கைது செய்து தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.